காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் வரும் ஞாயிற்றுக்கிழமை(அக்.2) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், மாவட்டத்தில் அனைத்துத்துறை அலுவலா்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள், சமுதாய அமைப்பு உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.