அரியலூர்

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த குவாகத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.

குவாகம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன்(55). இவா் செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இரவு நேரத்தில் இவரது ஆடுகளை நாய்கள் கடித்து விடுவதால், ஆட்டுக் கொட்டகையைச் (பட்டி) சுற்றிலும் மின்வேலி அமைப்பது வழக்கமாம். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை அவரிடம் ஆடு மேய்க்கும் கீழ குவாகம் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் மகன் அருண்குமாா்(17) எதிா்பாராத விதமாக மின்வேலியில் சிக்கியதில் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற குவாகம் காவல் துறையினா், அருண்குமாா் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT