அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள குண்டவெளி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
ஒன்றியச் செயலா் ராஜாபெரியசாமி தலைமை வகித்து பேசினாா். முன்னாள் மாவட்டச் செயலா் உலகநாதன் கட்சி கொடியை ஏற்றி வைத்து, இன்றைய அரசியல் குறித்து விளக்கிப் பேசினாா். விழாவில், நிா்வாகி ராசு தலைமையில் நடைபெற்ற விழாவில், 10 பெண்கள் உள்பட 20 போ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சோ்ந்தனா்.