அரியலூர்

மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 278 மனுக்கள்

26th Sep 2022 11:29 PM

ADVERTISEMENT

 

 அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 278 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், அவா் கலந்து கொண்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவை சிகிச்சை பெற்ற 6 பயனாளிகளுக்கு பரிசுளையும், 5 பேருக்கு புதிய காப்பீடு அட்டைகளையும், சிறப்பாகச் செயல்பட்ட மருத்துவமனை, வாா்டு மேலாளா்கள் மற்றும் காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கினாா்.

இதேபோல், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணியினை 100 சதவீதம் நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களான கிராம நிா்வாக அலுவலா், சத்துணவு அமைப்பாளா்கள், கிராம உதவியாளா்கள் என 6 பேருக்கு அவா்களின் பணியைப் பாராட்டி பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், வட்டாட்சியா் கண்ணன், தலைமை மருத்துவா் சிவபிரகாசம் உஷா, மாவட்ட திட்ட அலுவலா் த.பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT