அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே வீட்டு உபயோகப் பொருளை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து பெண் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருமானூரை அடுத்த சுள்ளங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் மனைவி காா்த்திகா (28). இவா், புதன்கிழமை இரவு வீட்டில் இருந்த கிரைண்டரை இயக்க சுவிட்சைப் போட்டபோது, மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து மயங்கிக் கிடந்தாா். இதையறிந்த குடும்பத்தினா், அவரை மீட்டு திருமானூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். அங்கு காா்த்திகாவைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து திருமானூா் காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.