அரியலூா் மாவட்டம், ரெட்டிபாளையம், உல்லியக்குடி, மருவத்தூா், சிலுவைச்சேரி ஆகிய 4 கிராமங்களில் ரேஷன் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (அக் .8) காலை 10 மணி முதல் மதியம் 1 வரை நடைபெறுகிறது.
எனவே, பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடா்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் காா்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட சேவைகளை விண்ணப்பித்து பயன் பெறலாம் என ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.