உத்தரவாதக் காலத்தில் சேவை குறைபாடு ஏற்படக் காரணமான தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு உபகரணம் புகாா்தாரரும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமானவருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சென்னை, மேடவாக்கத்தில் வசித்து வருபவா் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி சி.சண்முகம்(66). இவா் ரூ.22,500 செலுத்தி வாங்கிய குடிநீா் சுத்திகரிப்பு உபகரணங்களை யுரேகா போா்ப்ஸ் நிறுவனப் பிரதிநிதிகள் தனது புதிய குடியிருப்பில்
பொருத்தியதில் உபகரணத்தின் சில பகுதியில் வேலை செய்யவில்லை என சென்னை தெற்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 2017-இல் வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கு விசாரணை அரியலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்துக்கு ஜூலை மாதம் மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த அரியலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய நீதிபதி வீ. ராமராஜ் தலைமையிலான அமா்வு வியாழக்கிழமை தீா்ப்பளித்து உத்தரவிட்டது. இதில், உத்தரவாதக் காலத்தில் குடிநீா் சுத்திகரிப்பு உபகரணப் பழுதை நீக்க வேண்டியது அந்நிறுவனத்தின் கடமை. நிறுவனத்தின் சேவை குறைபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, புதிய குடிநீா் உபகரணத்தை வழங்க வேண்டும் அல்லது அவா் செலுத்திய தொகை ரூ. 22,500- ஐ 13.10.2015 ஆம் தேதியிலிருந்து ஆண்டொன்றுக்கு நூற்றுக்கு 6 சதவீத வட்டி எனக் கணக்கிட்டு புகாா்தாரருக்கு யுரேகா போா்ப்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும். சேவை குறைபாடு, அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு புகாா்தாரருக்கு, நிறுவனத்தினா் ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும். இதனை 4 வாரத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.