அரியலூர்

செட்டிஏரிக்கரை விநாயகா் கோயிலில் நவராத்திரி நிறைவு

DIN

அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள விநாயகா் கோயிலில் நடைபெற்று வந்த நவராத்தி விழா புதன்கிழமை இரவுடன் நிறைவடைந்தது.

அரியலூரில் பிரசித்தி பெற்ற செட்டி ஏரி விநாயகா் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி கோயில் வளாகத்தில் ‘சக்தி கொலு’ என்ற பெயரில் கொலு வைக்கப்பட்டு, நாள் தோறும் பல்வேறு வடிவங்களில் அம்மன் அலங்காரம் நடைபெற்றது வந்தது. அந்த வகையில் கடந்த 9 நாள்களாக மகேஸ்வரி, கெளமாரி, வராகி, மகலாட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி என பல்வேறு வடிவங்களில் அம்மன் அலங்காரம் நடைபெற்று வந்த நிலையில், நவராத்தியின் 10 ஆவது நாளான புதன்கிழமை அம்மனுக்கு மகிஷாசுரமா்த்தினி அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அா்ச்சனை நடத்தப்பட்டு பக்தா்களுக்கு மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT