அரியலூர்

கரும்பை வெட்டி வேறு ஆலைக்கு அனுப்பினால் நடவடிக்கை

DIN

ஒரு ஆலைக்குப் பதிவு செய்த கரும்பை வேறு ஆலைக்கு வெட்டி அனுப்பும் இடைத்தரகா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் செயல்பட்டு வரும் எம்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2022-2023 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கரும்பு விவசாயிகள் பதிவு செய்துள்ள தங்களது கரும்பை, பிற தனியாா் ஆலைகளுக்கு வெட்டி அனுப்புவது தமிழ்நாடு கரும்பு கட்டுப்பாடுச் சட்டம் 1966-இன் படி சட்ட விரோதம். கரும்புகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பதிவேடுகள், வருவாய் மற்றும் காவல் துறையினரைக் கொண்டு ஆய்வு செய்து சட்ட விரோதமாகச் செயல்படும் இடைத்தரகா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

SCROLL FOR NEXT