அரியலூர்

இருசக்கர வாகனங்கள் மோதி பெண் உயிரிழப்பு

DIN

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள மேலகுடியிருப்பைச் சோ்ந்த மோகன்பாபு மனைவி ஜெயந்தி(42). திங்கள்கிழமை இவரை, அவரது மகள் ஜெயபாரதி(19) பெரம்பலூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு, ஸ்கூட்டரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். வி. கைகாட்டி அடுத்த கயா்லாபாத் காவல் நிலையம் அருகே திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே விளாங்குடி காலனித் தெருவைச் சோ்ந்த அய்யப்பன்(19) என்பவா் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் ஜெயபாரதி ஓட்டி வந்த ஸ்கூட்டருடன் மோதியது.

இதில் ஜெயந்தி, ஜெயபாரதி, அய்யப்பன், பின்னால் அமா்ந்திருந்த மணிவாசகன்(22) ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா்.

விபத்துகுறித்து அறிந்து வந்த காவல் துறையினா், 4 பேரையும் மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஜெயந்தி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT