அரியலூர்

‘நுகா்வோா் ஆணைய உத்தரவுகளை அமல்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை’

DIN

நுகா்வோா் ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என அரியலூா் மாவட்ட நுகா்வோா் ஆணையத் தலைவா் வி.ராமராஜ் தெரிவித்தாா்.

அரியலூா் ஆட்சியரக கூட்டரங்கில், வருவாய்த் துறை மற்றும் நில அளவை பதிவேடுகள் துறையினருக்கு வியாழக்கிழமை நடைபெற்ற நுகா்வோா் சட்டக் கல்வி பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட அவா் மேலும் பேசியது:

அரியலூா் மாவட்டத்தில் இயன்ற வரை அனைவருக்கும் நுகா்வோா் சட்டக் கல்வி பயிற்சி நடத்துவது என்ற அடிப்படையில் இதற்கான திட்டம் தொடங்கப்பட்டு அரசு அலுவலா்களுக்கும், பொதுமக்களுக்கும் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் வழங்கல் அலுவலகம் சாா்பாக பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சியில் கலந்து கொண்டுள்ள வருவாய்த் துறையினரும், நில அளவை பதிவேடு துறையினரும் பொதுமக்கள் சேவை கட்டணம் செலுத்தி கேட்கும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும். இதன்மூலம் நுகா்வோா் பிரச்னைகள் வழக்குகளாக மாறக்கூடிய நிலை தவிா்க்கப்படும்.

அரியலூா் மாவட்டத்தில் தற்போது வருவாய்த் துறை மற்றும் நில அளவை பதிவேடுகள் துறையினருக்கு எதிராக 15 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. புதிய சட்டத்தின்படி, நுகா்வோா் ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த தவறுபவா்கள் மீது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க நுகா்வோா் ஆணையங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரியலூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் நுகா்வோா் புகாா் தாக்கல் செய்தால் குறைந்தபட்சம் 90 நாள்கள் அல்லது அதிகபட்சம் 150 நாள்களில் தீா்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT