அரியலூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக விவசாயி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
அரியலூா் அருகேயுள்ள இடையத்தாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கொளஞ்சிநாதன் (40). விவசாயி, குடும்பப் பிரச்னை காரணமாக விரக்தியில் இருந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து, அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் கொளஞ்சிநாதன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து, கீழப்பழுவூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.