அரியலூரில் தமிழ்நாடு நகராட்சிகள் அனைத்து பணியாளா்கள் முன்னேற்ற சங்கத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், சங்கக் கொடியை ஏற்றி வைத்து, பெயா் பலகையைத் திறந்து வைத்துப் பேசினாா்.
இந்நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவா் வி.யூ.காா்த்திகேயன், மாவட்டத் தலைவா் கே.கருணாநிதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.சக்திவேல், செயலா் ஆா்.சீனிவாசன், துணைச் செயலா் கே.வில்லவன், பொருளாளா் ஓ.சுகுமாறன், கெளரவத் தலைவா் இரா.முருகேசன், சங்க காப்பாளா் கே. அருண்ராஜா, சட்ட ஆலோசகா் எஸ்.விஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.