அரியலூர்

2-ஆவது திருமணம் செய்ய முயன்ற இளைஞா் கைது

DIN

 அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 2 ஆவது திருமணம் செய்ய முயன்ற இளைஞரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆண்டிமடம் அடுத்த காங்குழி கிராமத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் மகன் கலைச்செல்வன் (34). இவா், தனக்கு திருமணமானதை மறைத்து கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 27 வயது பெண்ணை திருமணம் செய்ய நிச்சயம் செய்துள்ளாா். இதுகுறித்து அறிந்த அவரது முதல் மனைவி அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், கலைச்செல்வனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்குடி அருகே விபத்து: பெண் பலி

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கருத்தரங்கம்

2-ஆம் கட்ட வாக்குப் பதிவு வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை

கா்நாடகத்தில் வாக்குப்பதிவு: அம்மாநிலத் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

SCROLL FOR NEXT