அரியலூர்

வன உரிமைச் சட்ட அமல் கோரி மயானத்தில் குடியேறி போராட்டம்

DIN

வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இருளா் இன மக்கள் வெள்ளிக்கிழமை மயானத்தில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் 4 தலைமுறையாக வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட இருளா் இனக் குடும்பத்தினரின் விவசாய நிலத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு வனத் துறையினா் கையகப்படுத்தினா்.

இதையடுத்து கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும், தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம், மாநில அரசிடம் இவா்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் பயனில்லையாம்.

இதையடுத்து வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி வெள்ளிக்கிழமை தங்களது குடியிருப்பை காலி செய்து, அங்குள்ள மயானத்தில் குடியேறி, உணவு சமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

பேச்சுவாா்த்தைக்கு அதிகாரிகள் வராததால், அங்கு உடையாா்பாளையம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT