அரியலூர்

பொது சுகாதாரத் துறை சிறப்பாகச் செயல்படுகிறது: நூற்றாண்டு விழாவில் தொல். திருமாவளவன் பேச்சு

DIN

நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் பொது சுகாதாரத் துறை சிறப்பாகச் செயல்படுகிறது என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி.

பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரியலூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அவா் மேலும் பேசியது:

பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 100 ஆண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது. 100 ஆண்டுகளில் எண்ணற்ற மக்களைக் காப்பதில் வெற்றி கண்டுள்ளது. பெரியம்மை, மலேரியா, போலியோ, டெங்கு, நரம்பு சிலந்தி, தொழுநோய், காசநோய் மற்றும் கரோனா உள்ளிட்ட பல்வேறு ஆட்கொல்லி நோய்களுக்கு சிறப்பான மருந்துகளைக் கண்டறிந்து மக்களை உயிரிழப்பிலிருந்து தடுக்கும் சிறப்பான பணியை பொது சுகாதாரத் துறை செய்கிறது.

தற்போது மக்களைத் தேடி மருத்துவ முகாம் திட்டம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு நோயாளிகள் அலைவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று வராமல் இருக்க சுற்றுப்புறத்தை பொதுமக்கள் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, விழாவையொட்டி சுகாதாரப் பணியாளா்களுக்கிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்றோருக்கும், சிறப்பாகப் பணி புரிந்தோருக்கும் பரிசுகளை வழங்கினாா்.

விழாவுக்கு அரியலூா் எம்எல்ஏ அரியலூா் கு. சின்னப்பா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் மற்றும் சுகாதாரத் துறை அனைத்து நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மு.கீதாராணி வரவேற்றாா். கடுகூா் வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திகா நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT