அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே உள்ள நடுவலூா் கிராமத்தில் திங்கள்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
போட்டியை உடையாா்பாளையம் கோட்டாட்சியா் பரிமளம் தொடங்கி வைத்தாா். முன்னதாக மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இப்போட்டியில் அரியலூா், தஞ்சாவூா், பெரம்பலூா், கடலூா், மதுரை, சேலம், புதுக்கோட்டை, திருச்சி, கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650 காளைகள் பங்கேற்றன. 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். மாடு பிடி வீரா்கள் மற்றும் பாா்வையாளா்கள் என 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இதில் சிறந்த மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகள் ஆகியவற்றுக்கு சில்வா் பாத்திரங்கள், சோ், குடம், மின் விசிறி, ரொக்கப்பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இப்போட்டியை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனா்.