அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த குலமாணிக்கம் கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தாா். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அதன் பின்னா் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.