அரியலூர்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

DIN

அரியலூா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது.

அரியலூா் சடையபடையாச்சி தெருவைச் சோ்ந்தவா் ஆராமிருதம் மகன் மாரிமுத்து (22). இவா், கடந்த 2018 ஆம் ஆண்டில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இது தொடா்பான புகாரின்பேரில் அரியலூா் அனைத்து மகளிா் காவல் துறையினா், மாரிமுத்துவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவ்வழக்கு விசாரணை அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இறுதி விசாரணை முடிந்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றவாளி மாரிமுத்துவுக்கு சிறுமியைக் கடத்தியமைக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தமைக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும், சிறைத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பளித்தாா். இதையடுத்து மாரிமுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT