அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த கோடாலி-கருப்பூா் கிராமத்தில் பழைய பொன்னாற்று வாய்க்காலில் ரூ.41.09 லட்சத்தில் சிறுபாலம் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் நிகழ்வில் பங்கேற்று, பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கி வைத்தாா்.
ஊராட்சித் தலைவா் சுதா இளங்கோவன், ஒன்றிய இளநிலைப் பொறியாளா் சரோஜினி மற்றும் பலா் நிகழ்வில் கலந்து கொண்ட னா்.