அரியலூர்

மழை வேண்டி விநாயகருக்கு நூதன அபிஷேகம்

12th May 2022 01:02 AM

ADVERTISEMENT

 

அரியலூா்: மழைவேண்டி அரியலூரில் உள்ள விநாயகா் கோயிலில் நூதன முறையில் அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

அரியலூா் சின்னக்கடை வீதியில் பால பிரசன்ன சக்தி விநாயகா் கோயில் உள்ளது. மழை வேண்டி இக்கோயில் விநாயகரைச் சுற்றி கண்ணாடி தொட்டி அமைக்கப்பட்டு, மின் மோட்டாா் மூலம் 24 மணி நேரமும் பன்னீா் அபிஷேகம் நடைபெறும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொட்டியில் தேங்கும் பன்னீா் மீண்டும் விநாயகா் மீது விழும் வகையில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT