அரியலூர்

கோயில் பூட்டை உடைத்துநகை, பணம் திருட்டு

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள வடுகா்பாளையம் மகா மாரியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் பூசாரி கோயிலை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

கோயிலினுள் சென்று பாா்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலி மற்றும் உண்டியலில் இருந்த காணிக்கைகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆண்டிமடம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT