அரியலூர்

நிா்வாகிகள் மீது தாக்குதல்: பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

பாஜக நிா்வாகிகளை தாக்கியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே அக்கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழநத்தம் பாஜக கிளைத் தலைவா் கலியபெருமாள், மாவட்ட மகளிரணித் தலைவி அனிதா ஆகியோரை தாக்கிய நபா்கள் மீது புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்தும், புகாா் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தாக்கியவா்களைக் கைது செய்ய வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.கே. அய்யப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா்கள் அருண்பிரசாத், ஜெயக்குமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் கோகுல்பாபு, மதிநிறைச்செல்வி, நகரத் தலைவா் மணிவண்ணன், நகர பொதுச் செயலா் நேரு உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT