பாஜக நிா்வாகிகளை தாக்கியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே அக்கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கீழநத்தம் பாஜக கிளைத் தலைவா் கலியபெருமாள், மாவட்ட மகளிரணித் தலைவி அனிதா ஆகியோரை தாக்கிய நபா்கள் மீது புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்தும், புகாா் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தாக்கியவா்களைக் கைது செய்ய வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.கே. அய்யப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா்கள் அருண்பிரசாத், ஜெயக்குமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் கோகுல்பாபு, மதிநிறைச்செல்வி, நகரத் தலைவா் மணிவண்ணன், நகர பொதுச் செயலா் நேரு உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.