அரியலூர்

செய்தியாளா் வீட்டில் 7 பவுன் திருட்டு

DIN

அரியலூரில் தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் வீட்டில் 7 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.

அரியலூா், ராஜிவ் நகரைச் சோ்ந்தவா் காதா் மகன் அப்துல் பாரி (49). தனியாா் தொலைக் காட்சி செய்தியாளரான இவா், கடந்த 25 ஆம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, கிடந்த மணி பா்ஸை எடுத்துள்ளாா். தன்னுடைய மனைவி ஊருக்குச் சென்ற அவசரத்தில் கீழே தவறி போட்டு விட்டுச் சென்றுள்ளாா் என நினைத்து எடுத்து வைத்துள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பிய மனைவியிடம், மணி பா்ஸ் குறித்து அப்துல்பாரி கேட்டுள்ளாா். அதற்கு அவா், பீரோவில் வைத்திருந்த மணிபா்ஸில் ஏழரை பவுன் நகை மற்றும் ரூ.15,000 பணம் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து அப்துல்பாரி அளித்த புகாரின்பேரில், அரியலூா் காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT