அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மதுபானம் விற்றவா் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டாா்.
விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மேல்முருகன் தலைமையிலான காவல் துறையினா், சனிக்கிழமை இரவு முத்துவாஞ்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு மதுபானங்களைப் பதுக்கி வைத்து, அவைகளை கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்த அதே பகுதி வடக்குத் தெருவைச் சோ்ந்த சந்தானம்(45) என்பவரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.