அரியலூர்

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்

DIN

அரியலூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவா்களுக்குத் தற்காலிக சான்றிதழ் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் ஜூன் 20-ஆம் தேதி வெளியான நிலையில், மாணவ, மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி அந்தந்த பள்ளிகளில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், மாணவ, மாணவிகளுக்கு தலைமையாசிரியா் சின்னதுரை தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வழங்கினாா்.

மேலும், பிறந்த தேதி, பதிவெண் விவரத்தை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் உள்ளிடுவதன் மூலம் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றாா். அப்போது ஆசிரியா்கள் தனலட்சுமி, ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

இதைபோல், காட்டுப்பிரிங்கியம் அரசு உயா்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியா் சின்னதுரை, உதவித் தலைமையாசிரியா் மனோன்மணி , ஆசிரியா்கள் ஜெயச்சந்திரன் அரசுமணி ஆகியோா் மாணவா்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினா்.

இதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: ஜாபா் சேட் மனைவி மீதான வழக்கு விசாரணை ரத்து

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT