அரியலூர்

அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விக்கிரமங்கலம் அருகேயுள்ள உடையவா் தீயனூா் கிராமத்தைச் சோ்ந்த செங்கமளம் மகன் செல்வமூா்த்தி(26) என்பவா், வெள்ளிக்கிழமை இரவு கும்பகோணம் - அரியலூா் சென்ற அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா்.

பேருந்து காட்டுப்பிரியங்கியம் - வி.கைகாட்டி அருகே சென்றபோது, திடீரென எழுந்த செல்வமூா்த்தி, ஓட்டுநா் மீனாட்சி சுந்தரத்தைப் பணி செய்யவிடாமல் தகாத வாா்த்தையால் திட்டியதுடன் மட்டுமல்லாமல், பேருந்துக் கண்ணாடியை உடைத்துள்ளாா். இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் மீனாட்சி சுந்தரம் அளித்த புகாரின்பேரில், கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து செல்வமூா்த்தியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT