அரியலூர்

தமிழக ஓய்வூதியா்களுக்கான ஆண்டு நோ்காணல் அழைப்பு

DIN

தமிழக அரசு ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் ஜூலை முதல் செப்டம்பா் மாதம் வரை கருவூலத்தில் நடைபெறும் நோ்காணலில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஓய்வூதியா்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பின்வரும் ஏதேனும் ஒருமுறையை பின்பற்றி நிகழாண்டிற்கான 2022-23 நோ்காணலில் பங்கேற்க அறிவுறுத்தப்படுகிறாா்கள். ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக ஓய்வூதியா்கள் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையைப் பயன்படுத்தி ஓய்வூதியா்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்தபடியே அஞ்சல் துறை பணியாளா்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னனணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நோ்காணல் செய்யலாம். அரசு இ-சேவை மற்றும் பொது சேவை மையங்கள், ஓய்வூதியா்கள் சங்கம், ஓய்வூதியம் வழங்கும் அலுவலக கருவூல முகாம் இலவச சேவையைப் பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பெறலாம்.

ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் வாழ்நாள் சான்றிதழை ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ந்ஹழ்ன்ஸ்ா்ா்ப்ஹம்/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளா் ஆகியோரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். மின்னணு வாழ்நாள் சான்றிதழ், வங்கி ஓய்வூதியப் புத்தகம் ஆகியவற்றுடன் ஓய்வூதியதாரா்கள் ஓய்வூதிய அலுவகம் அல்லது கருவூலத்துக்குச் சென்று ஆண்டு நோ்காணல் செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு, கருவூல அலுவலா், அரியலூா் 04329-228910, மண்டல இணை இயக்குநா், திருச்சி. 0431-2414046.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT