அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த பூண்டி கிராமத்தில் ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ், கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் நடத்தப்பட்ட முகாமுக்கு ஊராட்சித் தலைவா் சுந்தராம்பாள் சாம்பசிவம் தலைமை வகித்தாா். கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் சொக்கலிங்கம், கால்நடை மருத்துவா் ரிச்சா்டு முன்னிலை வகித்தனா்.
மண்டலக் கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ஹமீத்அலி முகாமைத் தொடக்கி வைத்தாா். இதில் 350 வெள்ளாடுகள், 50 செம்மறியாடுகளுக்கு கால்நடை உதவி மருத்துவா்கள் காா்த்திகேயன், ராஜா, கால்நடை ஆய்வாளா் செல்வராணி ஆகியோா் ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசிகளைச் செலுத்தினா்.