அரியலூர்

அரியலூரில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் திறப்பு

DIN

அரியலூா் விளாங்காரத் தெருவிலுள்ள எம். பி கல்வி அறக்கட்டளையில், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா தலைமை வகித்தாா். போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். தொடா்ந்து அவா் கூறியது:

இந்த மையத்தில் இலவசத் திறன் பயிற்சிகள், கல்வி ஆலோசனை சேவைகள், வேலைவாய்ப்பு ஆலோசனைகள், போட்டித் தோ்வுக்கான பயிற்சிகள், ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்டவைகள் அளிக்கப்படும் என்றாா்.

விழாவில் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம்.ராமன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சி.ரமேஷ், அரியலூா் அரசு கலைக் கல்லூரி

முதல்வா் ஜெ.மலா்விழி, மாவட்டத் திறன் அலுவலா் எம்.செல்வம் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT