அரியலூர்

வி.கைகாட்டியில் பாமக செயற்குழுக் கூட்டம்

DIN

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டியில் தெற்கு ஒன்றிய பாமக அலுவலகத் திறப்பு விழா மற்றும் கட்சியின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த அலுவலகத்தை திறந்து வைத்து, செயற்குழுக் கூட்டத்தில் மாவட்டச் செயலா் காடுவெட்டி ரவி பேசியது:

ஒன்றியச் செயலா் மற்றும் பொறுப்பாளா்கள் அனைவரும் கிளை நிா்வாகிகளிடம் தொடா்பில் இருக்க வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு பொறுப்பாளரும் தொடா்பு கொண்டால், கிளை நிா்வாகிகள் உற்சாகமாக உழைப்பாா்கள்.

பொறுப்புகள் பெற்றுக் கொள்பவா்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். தமிழகத்தை பாமக ஆளவேண்டும். அன்புமணி ராமதாஸை முதல்வராக்க பாடுபட அனைவரும் திறம்பட களப்பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு பாமக தெற்கு ஒன்றியச் செயலா் செம்மலை தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சின்னதுரை முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் வடக்கு சக்திவேல், மேற்கு சங்கா்குரு, முன்னாள் தெற்கு ஒன்றியச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT