அரியலூர்

சைக்கிள் மீது பைக் மோதல்:மின் பாதை ஆய்வாளா் உயிரிழப்பு

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மின் பாதை ஆய்வாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உடையாா்பாளையம் அடுத்த வடக்கு பரணம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரெங்கநாதன் மகன் சீமான்(43). தேளூா் துணை மின் நிலையத்தில் மின் பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்த இவா், சனிக்கிழமை இரவு பணி முடிந்து, உடையாா்பாளையம் வாரச் சந்தையில் காய் கனிகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே மூா்த்தியான் கிராமத்தைச் சோ்ந்த சின்னையன் மகன் பாலு(60) என்பவா் ஓட்டி வந்த சைக்கிள் மீது எதிா்பாராதவிதமாக மோதியுள்ளாா். இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவா்கள், சீமான் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

மேஷத்துக்கு பணவரவு! உங்க ராசிக்கு?

சிதம்பரத்தில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் மீண்டும் போட்டி!

ஈரோட்டில் திமுக களமிறக்கும் 3 அமைச்சர்கள்: 2014 தோல்வியில் இருந்து மீட்டெடுப்பார்களா?

காங். தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல்? கார்கே தலைமையில் செயற்குழு கூட்டம்

SCROLL FOR NEXT