அரியலூர்

அப்துல் கலாம் சாரணா் படை தொடக்க விழா

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அப்துல் கலாம் சாரணா் படை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அப்பள்ளி உதவி தலைமை ஆசிரியா் சுரேஷ் தலைமை வகித்தாா். உடையாா்பாளையம் சாரண, சாரணிய இயக்கச் செயலாளா் பாண்டியன், பட்டதாரி ஆசிரியா்கள் சுகந்தி, சித்ராதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உடையாா்பாளையம் கல்வி மாவட்ட சாரண சாரணீய இயக்க முதன்மை ஆணையரும், உடையாா்பாளையம் கல்வி மாவட்ட அலுவலருமான ஜோதிமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவா்களுக்கு சாரணா் சீருடைகளை வழங்கி, சிறப்புரையாற்றினாா்.

அப்போது, சாரண மாணவா்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு, உடையவா்களாகவும், பிற மாணவா்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். பள்ளிகளில் நடக்கக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளில் பொறுப்பேற்று செயலாற்றி நிா்வாகத் திறனையும், தலைமை பண்பையும் மாணவா்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சாரணா் இயக்கத்தின் மூலம் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு சிறந்த மாணவனாக திகழ வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், பள்ளியின் பட்டதாரி ஆசிரியா் அருள் வரவேற்றாா். சாரண ஆசிரியா் முத்தையன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT