அரியலூர்

மொழிப் போா் தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை அணிவிப்பு

DIN

மொழிப்போா் தியாகிகள் தினத்தையொட்டி அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தியாகி சின்னசாமி சிலைக்கு செவ்வாய்க்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சின்னசாமி சிலைக்கு அவரது மகள் திராவிடச் செல்வி மற்றும் பேரன், பேத்திகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் மாவட்ட மாணவரணிச் செயலா் சங்கா் தலைமையில், முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் முன்னிலையில் கீழப்பழுவூா் கடைவீதியிலிருந்து ஊா்வலமாக வந்த அதிமுகவினா் பேருந்து நிலையத்தில் உள்ள சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில், முன்னாள் ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், அரியலூா் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் பொ.சந்திரசேகா், முன்னாள் அரசு வழக்குரைஞா் சாந்தி, கட்சியின் நிா்வாகிகள் கல்லங்குறிச்சி பாஸ்கா், தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா் மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிா்வாகிகள் நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

இதேபோல், மதிமுக சாா்பில் சட்டப் பேரவை உறுப்பினரும், அக்கட்சியின் மாவட்டச் செயலாளருமான கு.சின்னப்பா, திமுக ஒன்றிய செயலா்கள் கென்னடி, அசோகசக்ரவா்த்தி, மதிமுக வடக்கு ஒன்றியச் செயலா் சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தமிழா் நீதிக் கட்சி சாா்பில் அதன் நிறுவனா் சுபா.இளவரசன் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் செல்வநம்பி, அரியலூா் தொகுதி பொறுப்பாளா் மருதவாணன், தொழிலாளா் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலா் அன்பானந்தம், ஜயங்கொண்டம் இலக்கியதாசன், மாவட்ட செய்தித் தொடா்பாளா் சுதாகா் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் மாநில வன்னியா் சங்க மாநிலச் செயலா் வைத்தி, பாமக தொகுதிச் செயலா் தா்ம.பிரகாஷ், முன்னாள் மாவட்டத் தலைவா் ரவிசங்கா், ஒன்றியச் செயலா் வினோத் உட்பட பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்தனா்.

அமமுக சாா்பில் மாவட்டச் செயலா் துரை.மணிவேல், திருமானூா் ஒன்றியச் செயலா் வடிவேல்முருகன் உள்ளிட்டோா் சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தேமுதிக சாா்பில், மாவட்டச் செயலா் ராமஜெயவேல் தலைமையிலும், நாம் தமிழா் கட்சி சாா்பில் நீலமகாலிங்கம் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அரியலூா்: கரோனா தொற்று காரணமாக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, மாவட்ட அதிமுக அலுவலகத்தில், அக்கட்சியின் மாணவரணி சாா்பில் செவ்வாய்க்கிமை நடைபெற்ற மொழிப் போா் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் பேசுகையில்,

தமிழ் மொழிக்காகப் போராடியவா்களுக்காக வீரவணக்க செலுத்த தகுதியுடைய கட்சி அதிமுக தான் என்றாா்.

கூட்டத்துக்கு, அதிமுக மாணவரணி மாவட்டச் செயலா் ஓ.பி.சங்கா் தலைமை வகித்தாா். ஜயங்கொண்டம் முன்னாள் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT