அரியலூர்

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

DIN

அரியலூா் நகரில் உள்ள பழைய இரும்புக் கடையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான பழைய இரும்பு, பிளாஸ்டிக் மற்றும் காகிதங்கள் எரிந்து சாம்பலாயின.

அரியலூா் கைலாசநாதா் கோயில் தெருவை சோ்ந்தவா் காா்த்திக்(45). இவா், அதே தெருவில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருள்கள், காகிதம், அட்டை உள்ளிட்டவற்றை வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், வழக்கம்போல் சனிக்கிழமை இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்குச் சென்றாா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடை திடீரென தீப்பிடித்து எரிந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினா் அரியலூா் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தீயணைப்பு வீரா்கள் தண்ணீா் ஊற்றி அணைத்தனா்.

இருப்பினும், காா்த்திக் கடையில் இருந்த பழைய இரும்பு, அட்டை, பிளாஸ்டிக், காகிதம் உள்ளிட்ட சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாகின. விபத்து குறித்து அரியலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT