அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே முன்விரோதத் தகராறில் தனது தம்பியைத் தாக்கிய அண்ணன் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
உடையாா்பாளையம் அருகேயுள்ள ஜமுக்காளத் தெருவைச் சோ்ந்த சின்னதம்பி மகன்கள் குணசேகரன்(50), செந்தில்(35). விவசாயிகள். இவா்களிடையே முன்விரோதம் இருந்தது வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை அவா்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில் குணசேகரன் தாக்கியதில் பலத்த காயமடைந்த செந்தில் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில், உடையாா்பாளையம் காவல் துறையினா் குணசேகரன் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.