சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஜீவாவின் 59 ஆம் ஆண்டு நினைவு தினம் அரியலூரில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அரியலூா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலுள்ள ஜீவாவின் படத்துக்கு அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலா் டி. தண்டபாணி தலைமையில் அக்கட்சியினா் மற்றும் சாலையோர தெரு வியாபாரத் தொழிலாளா் சங்கத்தைச் சோ்ந்த பொறுப்பாளா்கள் பன்னீா்செல்வம், முரளி, முகமதுயூசுப் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செய்தனா்.