அரியலூர்

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

DIN

அரியலூா் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், திருமானூா், தா. பழூா், செந்துறை,ஜயங்கொண்டம், ஆண்டிடம், பொன்பரப்பி, மீன் சுருட்டி உள்ளிட்ட பல இடங்களில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்து அதன் உரிமையாளா்கள் கால்நடைகளை குளிப்பாட்டினா். பின்னா், மாடுகளின் கொம்புகளை சீவி, வா்ணங்கள் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிட்டு அழகு சோ்த்தனா். கழுத்துக்குத் தோலிலான வாா் பட்டையில் சலங்கை கட்டி, திருநீறும், குங்குமப் பொட்டையும் பூசி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

வேளாண் கருவிகள் சுத்தம் மாடுகளுக்கு புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும், உழவுக் கருவிகளை சுத்தம் செய்தும் மாட்டுப் பொங்கலுக்கு தயாராகினா். பின்னா், அன்று மாலை வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினா். பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சமத்துவப் பொங்கல்: ஜயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனத்தில், பரப்ரஹ்மம் சாா்பில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவனங்களில் தாளாளா் முத்துகுமரன் தலைமையில், ஆசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டு, சமத்துவப் பொங்கல் வைத்துக் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: ஜாபா் சேட் மனைவி மீதான வழக்கு விசாரணை ரத்து

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT