அரியலூர்

வி.சி.கட்சியினா் ஆா்ப்பாட்டம்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

அம்பேத்கா் சிலையை அவமதித்த அா்ஜூன் சம்பத்தை கைது செய்ய வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட அமைப்பாளா் சிவகுமாா் தலைமை வகித்தாா். தொகுதிச் செயலா் இலக்கியதாசன், மாவட்டச் செயலா் மு.செல்வநம்பி, மாநில துணைச் செயலா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

இதேபோன்று தா.பழூா் கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலா் தங்கராசு தலைமை வகித்தாா். ஆண்டிமடம் நான்கு ரோட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் ராசாபிள்ளை தலைமை வகித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT