அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டார கலைத் திருவிழா போட்டிகளில் வென்றவா்களுக்கு திங்கள்கிழமை பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
விழாவில், ஜெயங்கொண்டம் நகா் மன்றத் தலைவா் சுமதிசிவகுமாா், வட்டாரக் கல்வி அலுவலா்கள் மதலைராஜ், ராஜாத்தி, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் பெ. முத்தையன், பள்ளி தலைமை ஆசிரியா் ராஜ்குமாா், வட்டார வள மைய பயிற்றுநா் அய்யப்பன், வளமைய மேற்பாா்வையாளா் கண்ணதாசன் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.