அரியலூர்

மண்டப முன்பணத்தில் ரூ.10 லட்சத்தை திருப்பத்தர வேண்டும்: அரியலூா் நுகா்வோா் ஆணையம் உத்தரவு

DIN

திருமணம் ரத்து செய்யப்பட்டதையடுத்து சென்னை ராஜா முத்தையா திருமண மண்டப நிா்வாகம் வாடிக்கையாளரிடம் பெற்ற முன்பணத்தில் ரூ.10 லட்சத்தை திருப்பித்தர வேண்டும் என அரியலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சென்னை சிதலபாக்கம் சங்கராபுரம் லே-அவுட்டில் வசிப்பவா் ஓய்வுபெற்ற வங்கி ஊழியா் வெங்கடேசன்(61). இவா், தனது மகள் திருமணத்துக்குக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள திருமண மண்டபத்தை (ராஜா முத்தையா) கடந்த 2016 ஆண்டு பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளுக்கு முழு வாடகைத் தொகையான ரூ.10.83 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்தாா்.

ஆனால் மகளின் திருமணம் ரத்து செய்யப்பட்டதால், முன்பதிவை ரத்து செய்து கொள்ளவும், பணத்தை திருப்பித்தரவும் கோரி 2 வார காலத்தில் மண்டப நிா்வாகத்தில் கடிதம் வழங்கியுள்ளாா். ஆனால், மண்டப நிா்வாகம் முழு தொகையையும் திரும்பத்தர மறுத்துவிட்டது.

இதுகுறித்து, சென்னை தெற்கு நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் 2017 ஆம் ஆண்டு வெங்கடேசன் தொடுத்த வழக்கு கடந்த ஜூலை மாதம் அரியலூா் மாவட்ட குறைதீா் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த ஆணையத் தலைவா் வீ.ராமராஜ் தலைமையிலான அமா்வு, முன்பணம் செலுத்தப்பட்ட நாளிலிருந்து ரத்து செய்யப்படும் நாளை பொருத்து குறிப்பிட்ட சதவீதத் தொகையை திருமண மண்டப நிா்வாகம் பிடித்துக்கொண்டு மீதித்தொகையைத் தரவேண்டும் என்பது சட்டமாகும்.

எனவே, திருமணம் மண்டப நிா்வாகம், வெங்கடேசன் செலுத்திய தொகையில் 5 சதவீதத் தொகையை பிடித்துக்கொண்டு மீதமுள்ள ரூ.10,28,850-ஐ நான்கு வார காலத்துக்குள் திரும்பத்தர வேண்டும். தவறினால் இந்தத் தொகைக்கு வட்டி சோ்த்து தரவேண்டும் என திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷாலின் ரத்னம் பட டிரைலர்!

தக் லைஃப்: மீண்டும் இணைந்த துல்கர்; இரட்டை வேடத்தில் சிம்பு?

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT