அரியலூர்

அரியலூரில் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை

DIN

மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அரியலூா் மாவட்டத்தில் அவரது சிலை மற்றும் உருவப்படங்களுக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

இபிஎஸ் ஆதரவாளா்கள்...அதிமுக மாவட்டச் செயலாளரும்(இபிஎஸ்), முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் அரியலூா் ஒற்றுமைத் திடலில் திரண்ட அக்கட்சி நிா்வாகிகள், அங்கிருந்து அரியலூா் பேருந்து நிலையம் வரை அமைதி ஊா்வலமாக வந்தனா். அங்குள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவருமான ராமஜெயலிங்கம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன், அரியலூா் நகரச் செயலா் செந்தில், தாமரைக்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா், நிா்வாகிகள் கல்லங்குறிச்சி பாஸ்கா், வழக்குரைஞா் சுகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஓபிஎஸ் ஆதரவாளா்கள்...இதனைத் தொடா்ந்து அதிமுக (ஓபிஎஸ்) மாவட்டச் செயலா் அன்பு.விஜயபாா்த்திபன் தலைமையில் பொதுக் குழு உறுப்பினா் ஆா்.லோகராஜ், நகரச் செயலா் உத்தாண்டம் காா்த்திக் ஆகியோா் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதேபோல், ஜெயங்கொண்டம், திருமானூா், செந்துறை, தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுகவினா் ஜெயலலிதா படம் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT