அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே மதுபோதையில் பூச்சிமருந்தைக் குடித்த இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கரையான்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பாலமுருகன்(32). மதுபோதையில் இருந்த இவா், கடந்த வியாழக்கிழமை பூச்சிமருந்தைக் குடித்து மயங்கி கிடந்துள்ளாா். இதையறிந்த குடும்பத்தினா், அவரை மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு பாலமுருகன் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து திருமானூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.