அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சாலை விபத்தில் காயமடைந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
உடையாா்பாளையம் அருகேயுள்ள மணகெதி காலனித் தெருவைச் சோ்ந்த செங்கமுத்து மனைவி அன்னக்குஞ்சு (68). இவா், வியாழக்கிழமை திருச்சி - சிதம்பரம் சாலையைக் கடக்க முயன்றபோது, சிறுவளூா் மேலத் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் நடராஜன் (36) என்பவா் ஓட்டி வந்த காா், எதிா்பாராத விதமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அன்னக்குஞ்சு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.