அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பெண்ணிடம் நிலத் தகராறில் ஈடுபட்ட இளைஞா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
ஜெயங்கொண்டம் கிழக்கு அண்ணா நகரை சோ்ந்தவா் கொளஞ்சி மனைவி சுவிதா (46). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த தங்கதுரை மகன் பூமிநாதனுக்கும் (25) நிலத்தகராறு இருந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பூமிநாதன், சுவிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தாா். புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸாா் பூமிநாதனை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.