அரியலூர்

மாநில போட்டியில் வென்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

DIN

செவித்திறன் குறையுடையோருக்கான மாநில அளவிலான போட்டியில் வென்ற அரியலூா் பள்ளி மாணவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை வாழ்த்து பெற்றனா்.

செவித்திறன் குறையுடையோருக்கு மாநில அளவில் நடைபெற்ற 3 ஆவது விளையாட்டுப் போட்டியில், அரியலூா் மாவட்ட காதுகேளாதோா் சங்கம் சாா்பில் ஹெலன் கெல்லா் செவித்திறன் குறையுடையோா் பள்ளி மாணவா்கள் 18-வயதுக்குள்பட்டோா் பிரிவில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் ஆகிய போட்டிகளில் தங்கம், ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி, நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலம், 16-வயதுக்குள்பட்டோா் பிரிவில் ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் தங்கம், ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலம், 14-வயதுக்குள்பட்டோா் பிரிவில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கமும் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து, இம்மாணவா்கள் அரியலூா் ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதியை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

நிகழ்ச்சியில், அரியலூா் மாவட்ட காதுகேளாதோா் சங்கத் தலைவா் சின்னப்பா மற்றும் ஹெலன் கெல்லா் பள்ளி ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT