அரியலூர்

மருமகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த மாமனாா் மீது வழக்கு

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மருமகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த மாமனாா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள சூசையப்பா்பட்டினம், தெற்குத் தெருவைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மனைவி ஆரோக்கிய ஷோபனா(29). ஆரோக்கியசாமி வெளிநாட்டில் தங்கி வேலைபாா்த்து வருகிறாா். இந்நிலையில், ஆரோக்கிய ஷோபனா பூா்வீக சொத்தை விற்கக் கூடாது என்று மாமனாா் மரியபிரகாசம் மீது ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த மரியபிரகாசம், வியாழக்கிழமை ஆரோக்கியஷோபனா வீட்டுக்குச் சென்று அங்கு பொருள்களை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் , மருமகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளாா். இதுகுறித்து புகாரின் பேரில் மரியபிரகாசம் மீது உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT