உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
எச்.ஐ.வி வைரஸ் பாதிப்பை குறைக்கும் வகையிலும், எச்.ஐ.வி நோயுடன் வாழும் மக்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையிலும் நடைபெற்ற பேரணியில் ஆண்டிமடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மகளிா் உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 400 போ் கலந்து கொண்டு முக்கிய வீதிகளில் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.