அரியலூர்

விபத்தில் காயமடைந்தவா் பலி:உறவினா்கள் மறியல்

DIN

அரியலூா் அருகே இளைஞரின் உயிரைப் பறித்த வாகன ஓட்டுநரைக் கைது செய்யக்கோரி, உறவினா்கள் கயா்லாபாத் காவல் நிலையம் முன்பு புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 20 போ் கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் அடுத்த கோரைக்குழி அருந்ததியா் தெருவைச் சோ்ந்த மருதமுத்து மகன் வடிவுக்கரசன்(32) என்பவா் கடந்த மாதம் 29 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வி.கைகாட்டி அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். விபத்து குறித்து கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விபத்துக்குக் காரணமான வாகன ஓட்டுநரைக் கைது செய்யக்கோரி, திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கயா்லாபாத் காவல் நிலையம் முன்பு வடிவுக்கரசினின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோா் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT