அரியலூர்

மத நல்லிணக்க நாள் உறுதிமொழி

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாளை (ஆக.20) முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மத நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருமானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தலைமையிடத்து துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கா் தலைமையில் தலைமையிடத்து துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லதா, சக்திவேல் ஆகியோா் முன்னிலையில், அலுவலகப் பணியாளா்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதேபோல், தா. பழூா், செந்துறை, ஆண்டிமடம், ஜயங்கொண்டம், அரியலூா் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், ஆட்சியரகத்தில் துறை அலுவலகங்களிலும், மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT